மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் காலத்தால் முந்தி வெட்டப்பட்ட வென்பாக் கல்வெட்டுக்களை ஆராய்வோம்

 மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் காலத்தால் முந்தி வெட்டப்பட்ட 
வென்பாக் கல்வெட்டுக்களை ஆராய்வோம் .




  • பெரும்பிடுகு முத்தரையரின் வெற்றிச் செய்திகளை அக்கால தமிழ்ப் புலவர்கள் போற்றிப் பாடியவற்றைச் செந்தலைத் தூணில் பொறித்துள்ளனர் .
  • தற்சமயம் கல்வெட்டுக்கள் காலத்தினால் சிதைவுற்றுள்ளனர் .
  • இவை முழுமையாக நமக்கு கிடைத்து இருந்தால் முத்தரையர் ஆட்சியின் மகிமை நன்குவெளிப்படுத்த்திருக்கலாம்                                  
  • வெண்பா : 1
வெங்கட் பொருகயல்சேர் வேல்கொடியோன் வான்மாறன் 
செங்கட் கரும்பகடு சென்றுழ்க்க  - வான்குலத்தோர் 
தேரெழுந்தி மாவழுந்தச் செங்குருதி மண்பரந்த 
ஊரழுந்தி  யூரென்னு  மூர் .


விளக்கம் :


  • அழுந்தியூரில் நடைப்பெற்ற போரை விளக்கும் கல்வெட்டு வேல் கொடி உடையவன் என்பதையும் கூறுகிறது .
  • எதிர்த்து மரணமடைந்தவர்களின்  இரத்தத்தால் பூமியே சிவந்துகிடந்ததாகக் கூறுகிறது  .

வெண்பா : 2

ஒழுக  குருதி உடனொப்ப வோடிக் 
கழுகு கொழங்குடர் கவ்வ - விழிகட்பேய் 
புண்ணனளந்து கையும்பப் போர் மணலூர்  வென்றதே 
மண்ணளைந்த சீர் மாறன் வாள் .  

விளக்கம் :

  • மணலூரில் நடைப்பெற்ற போரை பற்றியும்  ,  போர்க்களத்தில் இரத்தமும் சதையுமாக நிறைந்துகிடந்தன
  • அவற்றை உண்பதற்காகப் பேய்களும் , கழுகுகளும் திரண்டு வந்ததைப் பற்றி விளக்குகிறது . 

வெண்பா : 3

வஞ்சிபூச் சூடிய வாளமருள் வாகைப்பூக்
குஞ்சிக் கமழ்கண்ணிக் கோமாறன் -  தஞ்சைக்கோன் 
கோளாளி  மொய்ம்பிற் கொடும்பாளூர் காய்ந்தெறிந்தான் 

தோளால் உலகளிக்குந் தோல் .


விளக்கம் :

  • மாறன் , தஞ்சைக்கோன்  என்ற விருதுப்பெயர்கள் பற்றியும் விளக்குகிறது  .
  • இவன் வாகைப் பூ  மாலை  உடையவன்  என்றும்  கொடும்பாளூரில் நடைப்பெற்ற போரின் வெற்றி பற்றியும்  சிறப்பாக  கூறுகிறது .



1 Comments